Tuesday, July 15, 2014

Some Random Thoughts in தமிழ்


மானுடம்


வந்த வழி அறியாது
சென்ற வழி புரியாது
பிருட்டங்களின்
நிழல்களைத் தேடும்
மிருகக் கும்பல்


அண்ணாமலை


மா மலை
மருந்து மலை
ஞானத் தபோதனரை
வா வாவென்று அழைத்த மலை
அண்ணாமலை
தேவி கல்லோத்தரையில்
ஜப தப பூசை புனஸ்காரங்களை
தவிர்த்தல் நலம் என நல்கிய
சிவனையே
சடங்குச் சாமானாக
மாற்றியது பக்தர்கள் கூட்டம்


பிரமிள்


மொழியற்ற, சாதியற்ற, மதமற்ற
உண்மையை காணத் துடித்த அவனை
இந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை
அவனுக்கும் இவ்வுலகம் புரியவில்லை
நீட்ஷேவின் வாக்கு பொல்லாததுதான்
பாவம்
அவனை மற்றும் தாக்கிற்று


நான்


காலையில் வரும் பால் காரருக்கு
கணக்காளர்  வூட்டம்மா
தாலி கட்டினவருக்கு
மனைவி
பிள்ளைகளுக்கு
அம்மா
என் பெற்றோர்களுக்கு
மகள்
கூடப் பிறந்தவர்களுக்கு
அக்கா / தங்கை
சேர்ந்து பணி புரிபவர்களுக்கு
"கொலீக்"
ஆனால்
பார்வதி, அத்தை, மாமி, ஆண்டி,
என்று
தினம் தினம் நான் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்
ஆனால்
நான் யார்?
பெயரா? உடலா? உறவுகளா? சம்பந்தங்களா?
நான் யார்?
தீராத கேள்விக் குறி

?????????????